அருமை...செசபிள் மாஸ்டர் செஸ் போட்டி-2 வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா;இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

சர்வதேச அளவில் மிகவும் சிறந்த 16 செஸ் வீரர்கள் பங்கேற்ற செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில்,தமிழகத்தின் சென்னையை

சர்வதேச அளவில் மிகவும் சிறந்த 16 செஸ் வீரர்கள் பங்கேற்ற செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில்,தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தாவும்(16 வயது) பங்கேற்றார்.

இதனையடுத்து,தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் காலிறுதி, அரையிறுதியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, இறுதிபோட்டியில் உலகின் நம்பர் 2 ஆன லிங் டிரனை எதிர்கொண்டார்.இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிங் டிரன்  பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்.இதனால், 2 வது இடத்தை தழுவினார் பிரக்ஞானந்தா .

unknown node

எனினும்,செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதால்,முதல் முறையாக சாம்பியன்ஸ் செஸ் டூரில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

unknown node

இதனைத் தொடர்ந்து,இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலைவாய்ப்பு வழங்கி இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது.அதன்படி,பணிக்கால அடிப்படையில் தனது 18-வது வயதில் பிரக்ஞானந்தா  பணியில் சேர்வார் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

unknown node