தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த சிவகுமார்!

sivakumar About shawl issue

Sivakumar : நடிகர் சிவக்குமார் அடிக்கடிபொது இடத்தில் செய்து வரும் விஷயங்கள் சர்ச்சையாக வெடிப்பது ஒன்று புதிதானது இல்லை. குறிப்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட ரசிகர் ஒருவர் சிவகுமாருடன் செல்பி எடுக்க முயன்றார். இதனை பார்த்த சிவகுமார் சற்று கடுப்பாகி ரசிகரின் போனை வாங்கி வீசினார். இந்த சம்பவம் அந்த சமயம் பெரிய சர்ச்சையாக வெடித்தது என்றே கூறலாம். READ MORE– அஜித்துடன் அதை மறக்கவே முடியாது…புகழ்ந்த சிம்ரன்! சிக்னல் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.! இந்நிலையில், … Read more

என் மகனை வச்சு என்ன பண்ற? அமீரிடம் பதறி போன சிவகுமார்.!

paruthiveeran ameer

பருத்திவீரன் பட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசியதற்கு சசிகுமார், சினேகன், பொன்வண்ணன், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பிறகு ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கையையும் வெளியீட்டு இருந்தார். அந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், பருத்திவீரன் பட படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் இயக்sivakumarகுனர் அமீர் பேசி வருகிறார். … Read more

பரபரப்பு செய்தியான பருத்திவீரன்.! முற்றுப்புள்ளி வைக்க சொன்ன சிவகுமார்.!

ameer gnanavel raja sivakumar

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ” பருத்திவீரன் பட சமயத்தின் போது அமீர் கணக்கு விஷயத்தில் என்னை ஏமாற்றிவிட்டார். படத்திற்கு சொன்ன கணக்கை விட அதிகமாக செலவு செய்து பணத்தை திருடிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார் ‘ என்று  விமர்சித்து பேசி இருந்தார். பேட்டியில் ஒரு இயக்குனரை பற்றி இவர் இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இது பற்றி இயக்குனர் அமீரும் ” அவர் … Read more

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை – சிவக்குமார் வாழ்த்து

Kamal Haasan SIVAKUMAR

உலக நாயகன் கமல்ஹாசன் நாளை (நவம்பர் 7 ஆம் தேதி) 69வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இன்றே தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். அந்த வகையில், உலக நாயகன் கமலுக்கு நெருங்கிய நண்பரான நடிகர் சிவகுமார், தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தனது வலது குறிப்பில், “சிவாஜி, கமலை தவிர வெரைட்டி ரோல்களை யாராலும் செய்ய முடியாது. 8 படங்களில் சேர்ந்து நடித்தோம். வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்த … Read more

சிவகுமார் குடும்பத்துடன் ராதிகா தீபாவளி கொண்டாட்டம்.! கார்த்தியுடன் செம குத்தாட்டம்.! வைரலாகும் வீடியோ…

தீபாவளி பண்டிகையை நேற்று மக்கள் மற்றும் கோலாகலமாக புது உடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள். அந்த வகையில், பிரபல நடிகரான சிவகுமாரின் குடும்பமும், ராதிகாவின் குடும்பமும் இந்த முறை தீபாவளியை இணைந்து கொண்டாடியுள்ளனர். அட ஆமாங்க.. நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, ராதிகா, பிருந்தா ஆகியோர் இந்த தீபாவளியை ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். ராதிகா குடும்பத்தினருடன் நடிகர் கார்த்தி புல்லட் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர். அதற்கான வீடியோவை நடிகை ராதிகா தனது ட்வீட்டர் பக்கத்தில் … Read more

தயாரிப்பாளர் மற்றும் கவிஞருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த நடிகர் சிவகுமார்…!

நடிகர் சிவக்குமார், அவரது மகன் நடிகர் சூர்யா, கார்த்திக் ஆகிய மூவருமே திரை உலகில் சாதித்து வருவதுடன் மட்டுமல்லாமல் சமூகத்தில் மக்களுக்கு தேவையான சில உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சிவகுமார் ஒரு தயாரிப்பாளர் மற்றும் ஒரு கவிஞர் ஆகிய இருவருக்கு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார். சிவகுமார் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அவரது இரண்டு படங்களை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் சூலூர் கலைப்பித்தன். தற்போது இவர் ஒரு சாதாரணமான வீட்டில் … Read more

என் ஞான தந்தையை இழந்து விட்டேன் – நடிகர் சிவகுமார் உருக்கம்..!

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ராஜநாராயணன். 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ராஜநாராயணன், பின்னர் எழுத்தாளராக மாறினார். கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுபவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இவர் புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு பல … Read more

சிவக்குமார் குடும்பத்தினர் 1 கோடி கொரோனா நிவாரண நிதி..!

சூர்யா, கார்த்தி அவர்களது தந்தை சிவக்குமார் ஆகியோர் இனைந்து 1 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் முக.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் … Read more

முத்தமிழ் கலைஞரோட வாரிசு நீங்க…! மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த நடிகர் சிவக்குமார்…!

தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி பொற்காலம் என்று சொல்வது போல் ஒரு நல்லாட்சியை  வழங்குங்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை பதிவு செய்த நிலையில், இன்று அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதனை அடுத்து மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்ததோடு, கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக … Read more

நடிகர் சிவக்குமாருக்கு கொரோனா தொற்றா.?உண்மை தகவல் இதோ.!

நடிகர் சிவகுமார் அவர்களுக்கு கொரோனா என்று பரவிய தகவல் உண்மையில்லை என்று சிவகுமார் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றானது தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஆனால் இந்த கொரோனா ஏழை எளியவர் என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் தாக்கியது .இதனால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் . இந்நிலையில் தற்போது நடிகரும் ,சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான சிவக்குமார் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்ததாகவும் ,அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் … Read more