#T20 World Cup 2022: ரிஸ்வான், ஷதாப் கான் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு முதல் வெற்றி.!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின், பெர்த்தில் நடைபெறும் இன்றைய சூப்பர்-12 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர் முடிவில் 91 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக காலின் அக்கர்மன் 27 ரன்கள் குவித்தார். பாக். அணியில் ஷதாப் கான் 3 விக்கெட்களும், மொஹம்மது வாசிம் விக்கெட்களும் வீழ்த்தினர். 92 ரன்கள் இலக்குடன் பாக்.அணி அடுத்து களமிறங்கியது.

பாகிஸ்தான் அணியில் மொஹம்மது ரிஸ்வான் 49 ரன்களும், ஃபகார் சமான் 20 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். முடிவில் பாக். அணி 13.5 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்