#T20 WC 2022: டாஸ் வென்று வங்க தேச அணி முதலில் பௌலிங்.!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா-வங்கதேசம் ஆட்டத்தில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பௌலிங்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இன்று முன்னதாக நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இதுவரை 11 டி-20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் 10 போட்டிகளில் இந்தியாவும் 1 போட்டியில் வங்கதேசமும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இரண்டு அணிகளும் 12 ஆவது முறையாக மோதுகின்றன.

இந்த தொடரில் இரு அணிகளும் இதுவரை 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தியா ரன் ரேட் அடிப்படையில் இந்தியா 2 ஆவது இடமும் வங்கதேசம் 3 ஆவது இடமும் வகிக்கிறது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(C), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்(W), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(C), அஃபிஃப் ஹொசைன், யாசிர் அலி, மொசாடெக் ஹொசைன், ஷோரிபுல் இஸ்லாம், நூருல் ஹசன்(W), முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்