நாளைய போட்டியில் ஷமி ,ஜடேஜா இருக்க வேண்டும் -சச்சின் !

Default Image

நடப்பு உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் நாளை முதல் அரைஇறுதி போட்டி தொடக்க உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் முதல் முறையாக மோத நடப்பு உலகக்கோப்பையில் மோத உள்ளது.

இதற்கு முன் லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மோத இருந்த நிலையில் மழை காரணமான போட்டி ரத்தானது.நாளை போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரியதாக உள்ளது.

ஜடேஜா நாளைய போட்டியில் இடம்பெறுவாரா? , புவனேஷ் குமார் ,ஷமி இவர்களில் யார் இடம் பெறுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.இந்நிலையில் சச்சின் கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார்.

சச்சின் கூறுகையில் ,நாளைய போட்டியில் 5 பந்து வீச்சாளர்கள் உடன் களமிறங்க கூடாது.ஒரு பந்து வீச்சாளர் அதிகமாக தேவை எனவே ஜடேஜா இடம் பெறவேண்டும்.மேலும் நாளைய விளையாட கூடிய மான்செஸ்டர் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஷமி சிறப்பாக பந்து வீசினார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ஷமி விளையாடினால் நல்ல இருக்கும் என சச்சின் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்