ஹோட்டல்கள் மற்றும் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கும் அரசு தட்டச்சு பயிற்சி மையத்தை திறக்க அனுமதிக்காதது ஏன்?

டாஸ்மாக் கடைகள் மற்றும் ஹோட்டல்களை திறக்க அனுமதித்திருக்கும் பொழுது, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்தது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், தட்டச்சுப் பயிற்சி மையங்கள், கணினி மையங்கள், ஹோட்டல்கள், ரயில்கள், விமானப் போக்குவரத்து என அனைத்துமே மூடப்பட்ட … Read more

1.92 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு – குணமாகியவர்கள் எவ்வளவு?

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.92 கோடியாக அதிகரித்துள்ளது, அதே சமயம் குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.23 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, தற்பொழுது வரை 19,257,649 பேருக்கு பரவியுள்ளது. இவர்களில் 717,687 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12,357,654 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். கடந்த 24  மணிநேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 280,997 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6,464 … Read more

பதிவு செய்தவுடன் இ – பாஸ் வழங்க வேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லை – அமைச்சர் வீரமணி!

பதிவு செய்த உடனே இ பாஸ் வழங்க வேண்டும் என்பதற்கான சட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் வீரமணி அவர்கள் கூறியுள்ளார். வேலூரில் 13 அங்கன்வாடி சாவிகளை பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி அவர்களும் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் … Read more

நாளை மறுநாள் முதல் தூத்துக்குடி – பெங்களூர் விமான சேவைகள் துவக்கம்!

தூத்துக்குடி முதல் பெங்களூரு இடையேயான விமான சேவை நாளை மறுநாள் முதல் மீண்டும் துவங்கப்படுகிறது. கொரானா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதுமே உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தன்னால் விமான சேவைகள், பேருந்துகள், பள்ளி கல்லூரிகள் அனைத்துமே செயல்படாமல் உள்ளது. தற்பொழுது தான் அரசு சில தளர்வுகளை கொடுத்து வருகிறது. விமான சேவைகள் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு கொண்டு இருந்தது நிலையில், … Read more

கொரோனா அறிகுறி தென்பட்டால் ஆரம்பத்திலேயே மருத்துவமனையை அணுகுங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கிண்டி ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்க கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். … Read more

7.11 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு – மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகளவில் 7.11 லட்சத்தை கடந்துள்ள கொரோனா உயிரிழப்பு, மொத்த பாதிப்பு  1.89 கோடியாக அதிகரிப்பு. உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தற்பொழுது வரை உலகம் முழுவதிலும் மொத்தமாக 711,220 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகளவில் கொரோனாவால் 18,975,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர 12,163,754 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,098,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் … Read more

இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரச்சனை உள்ளது- ட்ரம்ப்!

இந்தியா மேற்கொள்ளும் கொரோனா நடவடிக்கையை பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா சிறந்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அதேசமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகிலேயே அதிக அளவில் 6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நாடு அமெரிக்காதான் எனக் கூறியுள்ளார். … Read more

கொரோனாவால் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்பது தவறான செய்தி!

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் அதிகரித்து வந்தாலும் தமிழகத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தவர்களை விட குணமாகியவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். இதை தொடர்ந்து தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. இதற்கு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து … Read more

உலகம் முழுவதிலும் தற்பொழுது வரை கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரை 1.87 கோடியாகவும், உயிரிழப்பு 7 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை உலகம் முழுவதும் 18,692,376 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,703,381  பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 6,079,484 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 254,988 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் நேற்று … Read more

கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம்!

கொரோனாவால் அதிகப்படியான மருத்துவர்கள் இந்தியாவில்தான் உயிரிழக்கின்றனர். உலகம் முழுவதிலும் கொரனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதுவரை 1.84 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், அதிலிருந்து மக்களை பாதுகாக்க 24 மணி நேரமும் அயராது உழைப்பவர்கள் மருத்துவர்கள்தான். ஆனால், அந்த மருத்துவர்கள் பலர் இந்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிர் இழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் அதிக அளவில் உயிரிழந்த மருத்துவர்கள் இந்தியாவில் தான் அதிகம் என … Read more