சர்வதேச போட்டிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பே இல்லை!! ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த கபில்தேவ்

Default Image
  •  நீண்ட ஒய்வில்  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி
  • அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென்று ஒரு தனித்துவத்தோடு கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் தோனி அண்மைக்காலமாக அவர் நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார்.அவருடைய ரசிகர்கல் அவர் மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்புவாரா? என்ற கேள்வி புரியாத புதிராக தற்போது வரை இருந்து வருகிறது

இந்நிலையில் இன்னும் சில மாதங்களில்  ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது அதில் அவர் சிறப்பாக விளையாடினால் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் கூறுகிறது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் எம்எஸ் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இடம் கேள்கப்பட்டது.இதுகுறித்து  கேள்விக்கு கபில்தேவ் அளித்த பதில் எம்எஸ் தோனி நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடவில்லை.எனவே அப்படி இருக்கும் போது எவ்வாறு மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் இன்னும் நிலைத்து இருக்க அவருக்கு பார்ம் மிக முக்கியம். தேசிய அணிக்கு எது தேவை என்பதை தேர்வுக்குழு  கட்டாயம் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதனால் சர்வதேச போட்டியில் தோனி தற்போது விளையாட வாய்ப்புகள் குறைவு என்ற கபில்தேவின் இந்த பதில் தோனி ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்