INDvsNZ : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ‘இந்தியா’! போராடி வீழ்ந்தது நியூசிலாந்து!

இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது இந்தியா.

2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது இந்தியா.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது.

ஆரம்பத்தில் நியூசிலாந்து ஓரளவு ரன்கள் குவித்தது போல இருந்தாலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து அணி சார்பாக டேரில் மிட்செல்  அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். அடுத்து மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார்.

ரச்சன் ரவீந்திரா 37 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 34 ரன்களும், வில் யங் 15 ரன்களும், டாம் லதாம் 14 ரன்களும், கேன் வில்லியம்சன் 11 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 8 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

50 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் , சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் ஒருபுறம் ரோஹித் சிறப்பாக விளையாட, மறுபுறம்  சுப்மன் கில் நிதானமாக விளையாடி வந்தார்.  இதற்கிடையில் ரோஹித் தனது  41-வது பந்தில் அரைசதம் பூர்த்தி செய்தார்.

நிதானமாக விளையாடி வந்த சுப்மன் கில் 19-வது ஓவரில்  க்ளென் பிலிப்ஸிடம்  கேட்சை கொடுத்து 31 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் விராட்கோலி வந்த வேகத்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இருப்பினும் அடுத்த சில ஓவரில்  சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ரோஹித் 76 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அரை சதத்தை தவற விட்டு 48 ரன்களும்,  அக்சர் படேல் 29 ரன்களும், ஹர்திக் பாண்டியா 18  ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து இலக்கை எட்டி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் கே.எல் ராகுல் 34* ரன்களுடனும் , ரவீந்திர ஜடேஜா 9* ரன்னுடனும் இருந்தனர். அதிகபட்சமாக இந்திய அணியில் ரோஹித் 76 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல் தலா  2 விக்கெட்டையும்,  ரச்சின் ரவீந்திரா,  ஜேமிசன்  தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

மினி உலகக்கோப்பை எனக் கருதப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இறுதியாக 2013ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nellai Iruttukadai Halwa shop
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet