புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் 4வது போட்டி நடைபெற்ற நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா அணி இந்த போட்டியில், ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடினார். 30 பந்துகளில் அரை சதம் விளாசி தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். ஏனென்றால், மூன்றாவது போட்டியில் அவர் டி20 போட்டியில் விளையாடியது […]
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் தலைமை நிர்வாகம் (ICC) 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து இவர்கள் தான் சிறந்த அணி என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் அணியை அசத்தலாக வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தது தான். அதைப்போல, ரோஹித்தை தவிர இந்தியாவிலிருந்து ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரஞ்சி டிராபி போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமுடியாமல் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளார். ஏற்கனவே, நடந்து முடிந்த ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஐந்து இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே, 31 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அவர் மீது பல விமர்சனங்களும் கொட்டப்பட்டது. விமர்சனங்கள் அனைத்திற்கும் […]
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணிக்காக எடுக்கப்பட்டிருந்தார். இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். இந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டனாக பதவியேற்ற பிறகு பேசிய ரிஷப் […]
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆண்கள் தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இந்திய அணியை அறிவித்தனர். அப்போது, ரோஹித் சர்மா அஜித் அகர்கரிடம் பேசிய விஷயம் ஒன்று தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. அது எதைப்பற்றி என்றால் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு […]
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் , நியூசிலாந்து, குரூப் ஏ பிரிவிலும், பி பிரிவில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளது. இதில், இந்தியாவையும், பாகிஸ்தான் அணியையும் தவிர மற்ற அணிகள் தங்களுடைய வீரர்களை அறிவித்து விட்டனர். இன்று தான் கடைசி […]
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் கூடுதலாக அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த தொடரில் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பேட்டிங் பார்மும் மிகவும் மோசமானதாக இருந்தது என்றே சொல்லலாம். டெஸ்ட் போட்டியில் அவருடைய சமீபத்திய பார்ம் சற்று மோசமாக இருந்தாலும் கூட அவருக்கு ஆதரவாகவும் சில வீரர்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் […]
டெல்லி: இந்திய அணி வீரர்களுக்கு 10 புதிய விதிகளை பிசிசிஐ (BCCI) அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மீறும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அதன்படி, வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும். வெளிநாடு பயணங்களின் போது குடும்பத்தினர், தனிப்பட்ட உதவியாளர்களை அழைத்து வர கூடாது. பயிற்சி ஆட்டங்களில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் உள்பட 10 விதிகளை கட்டாயமாக்கியுள்ளது. நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளால் உலக டெஸ்ட் […]
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணிக்காக இடம்பெறவேண்டும் என்ற பிளேயிங் லெவனை தேர்வு செய்து வருகிறார்கள். தேர்வு செய்த முன்னாள் வீரர்கள் பலரும் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தான் வேண்டும், […]
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் கொட்டப்பட்டது என்றே கூறலாம். இது ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தீயான ஒரு தகவல் பரவியது. இந்த சூழலில், 5-வது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் விளையாடவில்லை அவருக்கு பதிலாக […]
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. 3வது போட்டி சமனில் முடிவடைந்தது. ரோஹித் சர்மா விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சரியாக விளையாடாத காரணத்தால் இந்த போட்டியில் அவருக்கு பதில் சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். […]
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. பும்ப்ரா தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. ஒரு 3வது போட்டியை போராடி சமன் செய்தது இந்தியா. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்கிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி […]
சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியுள்ளதாக நம்பதக்க வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் விலகியுள்ள நிலையில், அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த தொடரின் முதல் போட்டியை ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடமுடியாமல் போன நிலையில், அந்த போட்டியை பும்ரா தான் கேப்டனாக வழிநடத்தினார். அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் […]
சிட்னி : கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் யாரெல்லாம் விளையாடப்போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பு தான் பெரிய விஷயமாக உள்ளது. அதற்கு காரணமே, நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் அணிகளின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா (3) போட்டிகள் என சரியாக விளையாடாதது தான். எனவே, ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் சரியாக விளையாடாத […]
இங்கிலாந்து : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20, 3 ஒரு நாள் தொடர் கொண்ட போட்டிக்களில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி வரும் ஜனவரி 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் மூத்த முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க திட்டமிட்டு […]
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து டெஸ்ட் , ஒரு நாள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த சூழலில், அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு […]
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் இறுதி நாளில் நான்காவது இன்னிங்சில் 340 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி தொடர்ச்சியா விக்கெட்களை இழந்து போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
மெல்போர்ன் : இந்தியாவின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய வீரர்களுக்கு என்னதான் ஆச்சு? என்கிற அளவுக்கு நடைபெற்று வரும் (BGT) ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் இவர்களுடைய ரசிகர்கள் கடும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். அது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் நான்காவது இன்னிங்சில் 340 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி தொடர்ச்சியா விக்கெட்களை […]
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் சம பலத்துடன் இருந்தன. 3வது போட்டி சமன் செய்யப்பட்டது. 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிக்கிஸில் ஆஸ்திரேலியா அணி 474 […]
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளன. 3வது போட்டி சமன் செய்யப்பட்டது. 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. […]