டி .என் .பி .எல் போட்டியில் களமிறங்க உள்ள அல் ரவுண்டர் விஜய் சங்கர் !

Default Image

எட்டு அணிகள் கொண்ட 4-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி .என் .பி .எல் ) 20-ஓவர் கிரிக்கெட் போட்டி வருகின்ற 19-ம் தேதி தொடங்க உள்ளது.தொடக்க லீக் போட்டியில் சோப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோத உள்ளது.

மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளது.அதில் தலா 15 போட்டிகள் நெல்லை ,நந்தம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஒரு போட்டிகள் கொண்ட நாள்களில் போட்டி இரவு 07.15 மணிக்கு தொடங்கும் .இரண்டு போட்டிகள் கொண்ட நாள்களில் 03.15 மணிக்கும் ,07.15 மணிக்கும் தொடங்கும்.இறுதி போட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சென்னையில் டி .என் .பி .எல் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .அப்போது பேசிய இந்திய அணியின் அல் ரவுண்டர்  விஜய் சங்கர் ,டி .என் .பி .எல் கிரிக்கெட் இளம் வீரர்களுக்கு நல்ல அடித்தளமாகும் .இதன் மூலம் வாஷிங்டன் சங்கர் , டி .நடராஜன் ,வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஐபிஎல்  தொடரில் தேர்வாகி விளையாடி உள்ளனர்.

அதேபோல இவர்கள் தமிழக அணிக்காக ராஞ்சி போட்டியில் விளையாடி உள்ளனர்.மேலும் பலர் டி .என் .பி .எல் போட்டியில் சிறப்பாக விளையாடி ஐபிஎல்  போட்டியில் நுழைய வேண்டும் என விரும்புகிறேன் என கூறினார்.

டி .என் .பி .எல் தொடரில் நான் இதுவரை விளையாடியது இல்லை இந்த வருடம் நான் டி .என் .பி .எல் தொடரில் சோப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Leader Vijay
gold price
India vs England 1st ODI
Rahul Dravid auto drier
DelhiElections 2025