உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் ட்வீட்.
இன்று நாடுமுழுவதும் உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இந்த தினத்தை முன்னிட்டு, கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘உலக நாடுகள் வியக்கும் வகையில்,தொன்மையும் கலைச் சிறப்பும் மிக்க தமிழகம்,சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது.அந்த வகையில்,உலக சுற்றுலா தினமான இன்று,நம் சுற்றுலா தளங்களை பாதுகாப்பாக வைப்பதோடு,சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node