அதெல்லாம் நாங்க சொல்ல முடியாது., 3வது அணிக்கு செல்ல வாய்ப்பே கிடையாது – வைகோ

The DMK is running the Liberation Tigers of Tamil Eelam (LTTE) with honor, said DMK general secretary Vaiko.

விடுதலை சிறுத்தை கட்சியை திமுக கவுரவமாக நடத்தி வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதிமுக சார்பில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டது, திமுக எத்தனை தொகுதிகள் வழங்க முன்வந்துள்ளது என்ற கேள்விக்கு, அதெல்லாம் நாங்க சொல்ல முடியாது என்று வைகோ பதிலளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தையும், மரியாதையும் கொடுப்பது இல்லை என்ற குற்றசாட்டை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய வைகோ, அதுபோன்று குற்றசாட்டு இல்லை என்றும் அதில் உண்மை இல்லை எனவும் கூறி, திமுக மரியாதையாக தான் நடத்துகிறார்கள் என கூறியுள்ளார்.

திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டவுடன் அறிவிக்கிறேன். கமல்ஹாசன் கூறிருப்பது என்பது அது அவருடைய கருத்து, அது தவறான கருத்து விடுதலை சிறுத்தை கட்சியை திமுக கவுரவமாக நடத்தி வருகிறது என விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகள் மட்டும் வழங்கியிருப்பது, சமூக நிதிக்கு புறம்பானது என்று கமல் ஹாசன் கூறியதற்கு வைகோ பதிலளித்துள்ளார்.

மேலும், 3வது அணி அமைப்பதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அதில் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, 3வது அணிக்கு செல்ல வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக வைகோ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் நாங்க சொல்ல முடியாது., 3வது அணிக்கு செல்ல வாய்ப்பே கிடையாது – வைகோ