நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அதிமுக நாளை ஆலோசனை!

OPS-EPS-led consultation on urban local elections tomorrow.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் நாளை ஆலோசனை.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நாளை மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில்,  கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் நேர்காணல் நிறைவடைந்த நிலையில், நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.