நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு ரூ.150 கோடி மானியத்தொகை – தமிழக அரசு உத்தரவு!

The Tn govt has issued an order releasing a subsidy of Rs 150 crore for loss-making fair price shops under co-operative societies.

சென்னை:கூட்டுறவு சங்கங்களின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்காக ரூ.150 கோடி மானியத்தொகை விடுவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான முன்கூட்டிய மானியமாக ரூ.150 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பொது விநியோக முறை கூட்டுறவு சங்கங்களின்கீழ் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு ஏற்படும் நஷ்டத்திற்காக 2020-2021 ஆம் ஆண்டிற்கான ரூ.150 கோடி மானியத்தை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும்,மண்டல இணைப் பதிவாளர்கள் PDS I & PDS II பொது விநியோக முறையை இயக்கும் முகவர் நிறுவனங்களுக்குத் தொகையை ஒதுக்கீடு செய்து,சென்னை கூட்டுறவு சங்கப் பதிவாளரால் ஒதுக்கப்பட்ட தொகை முறையாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக,ஒவ்வொரு சொசைட்டிக்கும் உரிய மானியத் தொகையானது, மண்டல இணைப் பதிவாளரால் விகிதாச்சாரப்படி,நேர விரயம் ஏதுமின்றி உடனடியாக ஒரு நடவடிக்கை மூலம் விடுவிக்கப்பட்டு,அவ்வாறு விடுவிக்கப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட சங்கங்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவும்,கூட்டுப் பதிவாளர்கள் தங்கள் கணக்குப் புத்தகங்களில் தகுந்த சரிசெய்தல் உள்ளீடுகளைச் செய்ய சங்கங்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மானியத் தொகையை சிறிது சிறிதாக வழங்கக் கூடாது என்று இணைப் பதிவாளர்களுக்குக் கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

unknown node