#Breaking:"பட்டினிச் சாவு இல்லை என்று எப்படி கூற முடியும்" – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

The Supreme Court has questioned the Central government on how it can say that there is no starvation in the country.

டெல்லி:நாட்டில் பட்டினிச் சாவு இல்லை என்று எப்படி கூற முடியும்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.

நாட்டில் பட்டினிச் சாவே இல்லை என்று எப்படி கூற முடியும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் இறந்ததாக நாளிதழில் செய்திகள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்த நிலையில்,நாட்டில் நிகழ்ந்துள்ள பட்டினிச் சாவு தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளை சேகரித்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வறுமையில் வாடும் மக்களுக்கு சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பட்டினிச் சாவுகளை தடுக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தகைய உத்தரவை மத்திய அரசுக்கு பிறப்பித்துள்ளது.