பாகிஸ்தான் பிரதமராக தற்போது பதவி வகித்து வருபவர் இம்ரான் கான்.இந்நிலையில் அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது.அது என்னவென்றால் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளது.
எதற்கு இப்படி ஒரு நாட்டு பிரதமரின் அலுவலம் இருளில் மூழ்கியுள்ளது என்று பார்த்தால் பிரதமர் அலுவலகத்தின் கடந்த மாதத்திற்கான மின் கட்டணம் 41 லட்சம் அதனோடு இந்த மாதத்திற்கான மின் கட்டணம் 35 லட்சம் இதனை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மின்சார வாரியத்திற்கு செலுத்தவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது .
unknown nodeஇது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகத்திற்கு நோட்டீசும் அனுப்பப்பட்டு விட்டதாம் ஆனால் எந்தவித பதிலும் இல்லையாம் இதனால் பொறுமையை இழந்த அந்நாட்டு மின்சார வாரியம் பிரதமர் அலுவலகம் மின்கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பு துண்டித்து உள்ளது. அந்நாட்டு மக்களிடையே இந்த விவகாரம் பேசு பொருளாகியுள்ளது .