மொட்டை போடும் 1749 பணியாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை..!

An incentive of Rs. 5,000 per month will be given to 1749 bald employees registered in temples.

திருக்கோவில்களில் பதிவு செய்துள்ள மொட்டை போடும் 1749 பணியாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

கடந்த 4-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு  சட்டப்பேரவையில்,  திருக்கோவில்களில் பதிவு செய்துள்ள மொட்டை போடும் 1,749 பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஐந்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். முடிகாணிக்கைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தின் படி, மொட்டை போடும் பணியாளர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.