சிவக்குமார் கைது, அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு மேலும் ஒரு உதாரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தனர்.
unknown nodeஇந்த நிலையில் சிவக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவரது பதிவில், டி.கே.சிவக்குமார் கைது, அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு மேலும் ஒரு உதாரணம் ஆகும். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி தனி நபரை இலக்காக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.