ஏப்ரல் 4-ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி – தலைமை தேர்தல் அதிகாரி

Chief Electoral Officer of Tamil Nadu Satyaprada Sagu has given permission to conduct the election campaign till 7 pm on April 4.

ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுமதி வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுமதி வழங்கியுள்ளார்.

வழக்கமாக தேர்தல் பிரச்சாரம் இறுதி நாளில் மாலை 5 மணியுடன் பரப்புரை முடியும் நிலையில், இந்த முறை 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கி, மாலை 7 மணி வரை அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.