இரட்டைவேடம் போட்டதால், அவர்களை நம்ப மக்கள் தயாராக இல்லை – டிடிவி தினகரன்

TTV Dinakaran reports that the Tamil Nadu government should ensure that only oxygen is available in Sterlite for the next 4 months.

ஸ்டெர்லைடில் ஆக்சிஜன் மட்டும் அடுத்த 4 மாதங்களுக்கு நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் அறிக்கை.

ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்திருக்கும் சூழலில், அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி உயர்நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்பாமல் இங்குள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய அரசும், எதிர்க்கட்சியான திமுகவும் கடந்த காலங்களில் இரட்டைவேடம் போட்டதால், இப்போதும் அவர்களை நம்புவதற்கு தூத்துக்குடி மக்கள் தயாராக இல்லை என்றும் மக்களின் உணர்வை புரிந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆக்சிஜன் மட்டும் அடுத்த 4 மாதங்களுக்கு நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

unknown node