நீட் ,ஜே.இ.இ தேர்வுகள் பற்றி மோடி அரசு  மாணவர்களின் குரலை கேட்க வேண்டும்- ராகுல் காந்தி

நீட் ,ஜே.இ.இ தேர்வுகள் பற்றி மோடி அரசு  மாணவர்களின் கருத்தை  கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நீட் ,ஜே.இ.இ தேர்வுகள் பற்றி மோடி அரசு  மாணவர்களின் கருத்தை  கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு  வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க  வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு  செப்டம்பர்  13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வைத்தனர். இந்த சுழலில்   தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ  மற்றும் நீட் ஆகிய தேர்வுகள்  திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்தது.

இன்னலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,இன்று நமது லட்சகணக்கான மாணவர்கள் மோடி அரசாங்கத்திடம் ஏதோ சொல்கிறார்கள்.நீட் ,ஜே.இ.இ தேர்வுகள் பற்றி மோடி அரசு  மாணவர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை மோடி அரசு வகுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

unknown node