வடகிழக்கு மாநஅஜித் தோவலின் அடுத்த அதிரடி... 22 பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைத்த மியான்மர் இராணுவம்...

நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் இந்திய காவல் பணி அவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் திட்டத்தினால் நம் தூரக்கிழக்கு அண்டை நாடான  மியான்மர்

நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் இந்திய காவல் பணி அவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் திட்டத்தினால் நம் தூரக்கிழக்கு அண்டை நாடான  மியான்மர் அரசு அங்கு பதுங்கியிருந்த  வடகிழக்கு மாநிலத்தில் தீவிரவாத செயல்கலில் ஈடுபட்ட 22 பயங்கரவாதிகளை ஒப்படைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களன அஸ்லாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த இந்த பயங்கரவாதிகள் சிறப்பு விமானம் மூலமாக மணிப்பூர் மற்றும் அஸ்லாம் மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த மாநில காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

unknown node

இந்த 22பயங்கரவாதிகளை மியான்மர் ராணுவம் சகாய்ங் பகுதிகளில் நடத்திய இராணுவ ஆபரேஷன் ஒன்றில் கைது செய்த நிலையில்  நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் நமது பாதுகாப்பு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளால் தற்போது இது சாத்தியமாகி உள்ளது. இந்த 22பயங்கரவாதிகளில் 12பேர் மணிப்பூர் மாநிலத்தையும், 10 பேர் அஸ்லாம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் ராஜென் டய்மாரி, கேப்டன் ஸனடோம்பா நிங்தோஜாம், லெஃப்டினன்ட் பஷூராம் லெய்ஷ்ராம் ஆகியோர் முக்கிய பயங்கரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.