கனிமொழி எம்.பி அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இன்று நாடு முழுவதும், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் , ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘இந்த நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடத்தில் என்று சொன்ன இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருஅவர்களின் பிறந்தநாளே குழந்தைகள் தினம்.இந்நாளில் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் ஒழித்து அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்போம் என்று உறுதி கூறுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node