எவர் வேண்டும் என்றாலும் வரலாம் என வரவேற்கும் நாடு ஏதாவது இருக்கிறது என்றால் அதை காட்ட முடியுமா என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பேச்லட் தன்னையும் வாதியாகச் சேர்க்கக் கோரிமனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர் கேட்டதற்கு காஷ்மீர் விவகாரத்திலும் இதற்கு முன்னும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் தலையிட்டுள்ளது.
unknown nodeகுடியுரிமைச் சட்ட விவகாரத்தால் நட்பு நாடுகளை இழந்து வருகிறோமே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு யாரெல்லாம் நமது நண்பர்கள் எனப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு என்றுத் தெரிவித்தோடு நாடற்ற அகதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்காகக் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிதுள்ளார்.