#BREAKING : முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியளித்த ஆளுநர்..!

Governor Banwarilal has provided Rs 1 crore as corona relief fund.

கொரோனா நிவாரண நிதியாக ஆளுநர் பன்வாரிலால் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையால் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. அதிலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு, இந்த பேரிடரை எதிர்கொள்ளவதற்கு தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் கோரிக்கையை தொடர்ந்து, பலர் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

சற்று நேரத்திற்கு முன் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் முதலமைச்சருடன் சென்றனர்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகை வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியை  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.