ஓரிரு நாட்களில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ்

The decision to reopen the schools on September 1 will be announced in a couple of days, said Education Minister Anbil Mahesh.

செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், செப்.1ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால், பள்ளிகள் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும். நாளொன்றுக்கு 50% மாணவர்கள் மட்டும் பள்ளியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆலோசனை நடத்தி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.