அனுமதியில்லா கட்டுமானங்களை தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

The High Court has issued an order to stop unauthorized constructions in Chennai from the very beginning.

சென்னையில் அனுமதியில்லாமல் நடக்கு கட்டுமானங்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை நெற்குன்றத்தில் பெருநகர வளர்ச்சி குழுமம் விதிகளை மீறி கட்டடம் கட்ட தடை விதிக்க கோரி ஸ்டீபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்படுவதா? என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்டுமான பணிக்கு தடை விதித்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்டதால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சென்னையில் அனுமதியில்லாமல் நடக்கு கட்டுமானங்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்றும் நகரங்கள் விரிவடைந்து வரும் நிலையில் அனுமதியில்லா கட்டடங்களை அதிகாரிகள் தடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனுமதியில்லா கட்டுமானங்களை தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!