#BreakingNews: சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்.!

DMK zonal officers have been appointed to carry out the election work of the Tamil Nadu Legislative Assembly.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள திமுக மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுகவை பொறுத்தளவில் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணிகளை முடிவு செய்து, தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 500 வாக்குறுதிகளை கொண்ட திமுக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள, கவனித்திட திமுக மண்டலம் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களை அக்கட்சி தலைமை நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய மண்டலம் மு.சண்முகம் எம்பி, தெற்கு மண்டலம் கனிமொழி எம்பி, வடக்கு மண்டலம் ஜெகத்ரட்சகன் எம்பி, மேற்கு மண்டலம் தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளராக ஆ.ராசா எம்பி உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.