#BREAKING: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு – தடை விதிக்க மறுப்பு

Chennai High Court has refused to ban 10.5% internal quota for Vanni.

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5% உல் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு ஒருபக்கம் எதிர்ப்பும் மறுபக்கம் அனைத்து சமூகத்திற்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றும் சாதிவாரியாக கணக்கீடு நடத்தப்பட்ட பிறகு தான் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இதுகுறித்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தடைகோரி திண்டுக்கல் விஜயகுமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நீதிபதிகள் அணையிட்டுள்ளார். தமிழக அரசு 6 வாரங்களில் பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு – தடை விதிக்க மறுப்பு