தமிழகத்தில் 3,696 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு...!

Health Minister Ma Subramanian has said that 3,696 people in Tamil Nadu have contracted black fungus.

தமிழகத்தில் 3,696 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஜை பாதிப்பு ஏற்பட தொடங்கியது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பலர் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதுடன், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் இதுவரை 3,696 பேருக்கு கற்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.