ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் – ரூ.135 கோடி ஒதுக்கீடு

Funds have been allocated to set up beds with oxygen facilities in the corona wards of the Tamil Nadu Government Hospital.

தமிழக அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட பணிக்கு ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.65 கோடி, மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் ஆரம்ப கொரோனா காலத்தில் கொரோனா சிறப்பு வார்டுகளை ஒப்பந்ததாரர்கள் அமைத்து கொடுத்தனர்.

ஆனால், வார்டுகளை அமைத்த ஒப்பந்தரர்களுக்கு ரூ.135 கோடி வழங்கவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது. இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக, அனைத்து மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிப்பால், கூடுதலாக படுக்கைகள் அமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

எனவே, கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணி மேற்கொண்டதற்காக ரூ.135.41 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது. அதில், கொரோனா சிறப்பு வார்டுக்காக ரூ.135.419 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.