ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? முதல்வர் இன்று ஆலோசனை..!

A consultation on the extension of the curfew is being held this morning under the chairmanship of Chief Minister MK Stalin.

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து குறைய தொடங்கிய நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிலவற்றுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

இந்தநிலையில், மேலும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது  குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.