மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல்.! இரண்டாம் நாளாகதொடரும் பதற்றம்…

Manipur 4 police

மணிப்பூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பயங்கர பதற்றம் நிலவி வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மோரே நகரில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் மற்றும் ஒரு BSF வீரர் காயமடைந்தனர். தற்போது, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்னர். முன்னதாக, நேற்றைய தினம் தௌபல் மாவட்டத்தில் உள்ள லிலாங் சிங்சாவ் பகுதியில் குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் … Read more

மணிப்பூர்: புத்தாண்டில் மீண்டும் வெடித்த கலவரம் – 4 பேர் உயிரிழப்பு!

manipur new violence

மணிப்பூர் மாநிலத்தில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து, மணிப்பூர் அரசு நேற்று (திங்களன்று) தௌபால் மற்றும் இம்பால் போன்ற மேற்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. நேற்று மாலை தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் அடையாளம் தெரியாத  நபர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர், அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங், லிலாங்கில் வசிப்பவர்களிடம் … Read more

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா? – மருத்துவ நிபுணர்கள் விளக்கம்!

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை. சீனாவை மீண்டும் மிரட்டி வரும் புதிய வகை கொரோனா பரவல், இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவக்குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், அறிகுறி … Read more

#BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? – மருத்துவத்துறை செயலர் விளக்கம்!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மருத்துவத்துறை செயலர் விளக்கம். தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், நாட்டில் மீண்டும் கொரோனா பாவல் சற்று தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை … Read more

வன்முறையாக மாறிய போராட்டம் – இலங்கையில் ஊரடங்கு அமல்..!

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிக அளவில் காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன், டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு நகரில் உள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் வீட்டிற்கு அருகில் நேற்று பிற்பகல் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அங்கு போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து போலீசார் கண்ணீர் புகை மற்றும் … Read more

இன்று மாலை முதல் வரும் 28-ம் தேதி காலை வரை ஊரடங்கு – கீவ் மேயர் அறிவிப்பு

போர் பதற்றம் நிலாவை வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு. உக்ரைன் தலைநகர் கீவில் இன்று மாலை முதல் வரும் 28-ம் தேதி காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று கீவ் மேயர் அறிவித்துள்ளார். போர் பட்டம் நிலவி வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது கடந்த 24 -ஆம் தேதி முதல் தொடர்ந்து 31-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. … Read more

#BREAKING: தமிழகத்தில் ஜன.31 வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவதும், இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் … Read more

அவசர உதவி தேவைப்படுவோருக்கு உதவி எண் அறிவிப்பு – சென்னை காவல்துறை

ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அமலில் இருந்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு பல்வேறு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும் 112 … Read more

#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு?…கூடுதல் கட்டுப்பாடுகள் – மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை!

சென்னை:தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில்,ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்கின்றனர். அதன்படி,சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் … Read more

#BREAKING: ஜன.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு. கொரோனா மற்றும் ஓமைகாரன் தோற்று பரவலை தடுக்கும் விதமாக புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு செய்து புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. உணவகங்கள், … Read more