சீனாவில் அடுத்த கொரோனா பாதிப்பா.? குழந்தைகளுக்கு வேகமாக பரவும் சுவாச நோய்.!

RespiratoryDisease

சீனாவில் சமீபத்திய நாட்களில் சுவாச நோய் தொற்று பரவிவரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சீனாவில் புதிய சுவாச நோய் தொற்று உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது.

இதற்கு விளக்கமளித்த சீன சுகாதரத்துறை அமைப்பு, இப்போது அதிகமாக பரவி வரும் சுவாச நோய் என்பது பருவகால சுவாச நோய் என்றும் இது வழக்கமான எண்ணிக்கையை விட சற்று அதிகம். இருந்தாலும், புதியதாக எந்த வைரஸ் தொற்றும் ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்தது.

சீனாவில் அதிகரிக்கும் காய்ச்சல்.. புதிய வைரஸ் கண்டறியப்படவில்லை.! WHO-விடம் சுகாதாரத்துறை தகவல்.!

இந்நிலையில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னதாக சீனா அனுபவித்து வந்த சுவாச நோய் பாதிப்பின் எண்ணிக்கைக்கு மத்தியில், தற்போது அனுபவித்து வரும் சுவாச நோய்களின் அதிகரிப்பு அதிகமாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) அதிகாரி மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் மற்றும் தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் தடுப்புத் துறையின் செயல் இயக்குனர் மரியா வான் கெர்கோவ் இதுகுறித்து கூறுகையில், “கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய ஒப்பீடுகளை நாங்கள் பார்த்தோம். இப்போது பரவும் சுவாச நோய் 2018-2019 இல் பார்த்ததைப் போல அதிகமாக இல்லை. இது ஒரு புதிய நோய்க்கிருமியின் அறிகுறி அல்ல” என்று கூறினார்.

சீனாவில் நிமோனியா… மருத்துவமனையில் நிரம்பி வழியும் குழந்தைகள்.. அறிக்கை கேட்ட WHO..!

இதற்கிடையில் சீனாவில் பெங்ஜிங் மற்றும் லியோனிங் போன்ற நகரங்களில் பல குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தற்போது சீனாவில் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தான் இந்த தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்