காசாவில் நுழைந்து தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம்!

Israeli

பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ் அமைப்பு இம்மாதம் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரல் ராணுவம் தற்போது வரை காசா நகர் மீது வான்வழி தாக்குதலை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, வடக்கு காசாவுக்குள் நுழைந்து டாங்கிகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் இரவில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், ஹமாஸின் முக்கிய இடங்களை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர், ஹமாஸ் நிலைகள் மீது தரைவழி தாக்குதலை முடித்துவிட்டு இஸ்ரேல் ராணுவம் திரும்பியதாகவும்  அறிவித்துள்ளது.

முன்னதாக, தரைவழி தாக்குதலை தொடங்கவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருந்தாலும், தாக்குதலில் ஈடுபட தாமதமாகியது. இதற்கு ஒரு காரணம் அமெரிக்கா எனவும், அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று தரைவழி தாக்குதலை தாமதமாக்கியதாக சொல்லப்படுகிறது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியாவும் ஒரு காரணம்.? ஜோ பைடன் அதிர்ச்சி தகவல்.! 

ஆனால், நேற்று தான் முதல் முறையாக தரைவழியாக கசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவியதாக தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து 20வது நாளாக இஸ்ரேல், காசா மீதான வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

அணுகுண்டு சோதனை நடத்திய ரஷ்யா! திடீர் முடிவால் பரபரப்பு…அடுத்தது என்ன?

இந்நிலையில், ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,000-ஐ கடந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர், இதில் 2,055 குழந்தைகள் மற்றும் 1,119 பெண்கள் அடங்குவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்