நான் 10 பேரை என் கைகளால் கொன்றேன்..! ஹமாஸ் பயங்கரவாதி பேசிய ஆடியோவை வெளியிட்ட ஐடிஎஃப்.!

Gaza death toll

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 19 நாட்களாக மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மற்றும் தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலிருந்தும் குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று போரில் இதுவரை காசாவில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதில் 2,055 குழந்தைகள், 1,119 பெண்கள், 217 முதியவர்கள் என்று கூறப்படுகிறது. அதோடு 15,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு மத்தியில் 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 830 பேர் குழந்தைகள் எனவும் காசா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது ஹமாஸ் பயங்கரவாதி பயங்கரவாதி ஒருவர் காசா எல்லைக்கு அருகில் உள்ள கிபுட்ஸ் என்ற இடத்தில் மெஃபல்சிம் என்ற இடத்தில் கொலை செய்த யூத பெண்ணிடம் இருந்து திருடிய போனில் இருந்து தனது பெற்றோருக்கு போன் செய்து, ‘நான் 10 பேரை என் கைகளால் கொன்றேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த உரையாடலை இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) வெளியிட்டுள்ளது. அந்த உரையாடலில், ” உங்கள் மகன் யூதர்களைக் கொன்றுள்ளேன். என் கைகளாலையே எவ்வளவு பேரைக் கொன்றேன் என்று பாருங்கள். நான் என் கைகளால் 10 பேரைக் கொன்றேன். நான் கொன்றவர்களின் புகைப்படங்களை உங்களுக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளேன். அதைப் பாருங்கள்.” என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்