பாகிஸ்தானிலும் சுமார் 75 லட்சத்திற்கு மேற்பட்ட ஹிந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிந்து மாகாணத்தில் தான் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு இந்து பெண்மணி காவல்துறை உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். பாகிஸ்தான் காவல்துறையில் முதல் ஹிந்து பெண் அதிகாரி ஆக இவர் திகழ்ந்துள்ளார்.
unknown nodeபாகிஸ்தான், சிந்து மாகாணத்தை சேர்ந்த புஷ்பா கோலி என்பவர், காவலர் போட்டித்த தேர்வு எழுதி அதில் வெற்றி கண்டு தற்போது பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் சுமந்தவன் சுமன் பவன் போடானி என்பவர் பாகிஸ்தானின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.