அமெரிக்காவின் ‘பாம்ப்’ புயலுக்கு 60 பேர் பலி.!

Default Image

அமெரிக்காவில் ‘பாம்ப்’ புயலால் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் ‘பாம்ப்’ புயலால்(Bomb Cyclone) பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கடுமையான குளிர் வாட்டி வருகிறது. இந்த ‘பாம்ப்’ புயலுக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பாம்ப் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாமல் கார்கள் மற்றும் வீடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர், அவர்களை மீட்கும் பணியில் தேசிய காவலர் மற்றும் உள்ளூர் அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்