திருப்பூரில் இருந்து பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூரில் நேற்று 1140 தொழிலாளர்களுடன் பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளது.