இளம்பெண்ணை வன்கொடுமை செய்து விட்டு உங்களை மகள் என் வீட்டில் இருக்கிறாள் கூறிவிட்டு தப்பியோடிய இளைஞர்.!

Default Image
  • 20 வயது மதிப்புத்தக்க இளம்பெண்ணை  இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இளைஞர் ஒருவர் தூக்கி சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
  • அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் சென்றபோது உங்கள் மகள் எனது வீட்டில் இருக்கிறாள் என கூறிவிட்டு தப்பியோடி விட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தை சார்ந்த 20 வயது மதிப்புத்தக்க இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தூக்கி சென்று தனது வீட்டில் வைத்து 2 நாள்கள் வன்கொடுமைசெய்ததாக கூறப்படுகிறது.

அந்த இளம்பெண்ணை அடைத்து வைத்து இருந்த வீடு தனியாக இருந்ததால் அப்பெண்ணின் சத்தம் வெளியே யாருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் தனது மகள் காணவில்லை என கூறி இந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் கொண்டு சென்றனர் .

அப்போது அந்த பெண்ணை வன்கொடுமை செய்த இளைஞர் உங்கள் மகள் எனது வீட்டில் இருக்கிறாள் என கூறிவிட்டு தப்பியோடி விட்டார்.பின்னர் அந்த வீட்டிற்கு சென்று பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மயக்கநிலையில் இருந்த பெண்ணை மீட்டு அறந்தாங்கி மருதுவமனையில் சேர்ந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS FEB 27
tn rain
Rohit sharma
vijay yesudas and kj yesudas
lokesh and rajini coolie
Tamilnadu cm mk stalin (3)
Waqf Board - Parliament session