தகாத உறவால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு..!

Default Image

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள்.அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கும் , பச்சைமாலுக்கும் தகாத உறவு இருப்பதாக தெரிகிறது.
இந்த பிரச்சனை பச்சையம்மாள் கணவன் பழனிச்சாமிக்கு தெரியவர பழனிச்சாமி பச்சையம்மாளை விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்ற பச்சையம்மாளிடம்  செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சையம்மாளை வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் காயமடைந்த பச்சையம்மாளை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான செந்தில்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பச்சையம்மாளுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்