டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வைபவ் இன்னும் ரெடியாகவில்லை! ஹர்ஷா போக்லே ஸ்பீச்!

ஜிம்பாப்வே தொடரில் அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு டெஸ்ட் கிரிக்கெட் குறித்து ஹர்ஷா போக்லே முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hero Image

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தற்போது அனைவராலும் அதிகமாகப் பேசப்படும் இளம் வீரர்களில் வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தில் உள்ளார். தனது 15-வது வயதில் இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இந்த இளம் வீரர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெறும் 20 பந்துகளில் அசாத்தியமான முறையில் அரைசதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரராக மாறியதுடன், 'ஆட்ட நாயகன்' (Player of the Match) விருதையும் தட்டிச் சென்றார். இவரது இந்த அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் ஒருநாள் (ODI) அணியிலும் இவருக்கு இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் டி20 அணியின் கேப்டன் இஷான் கிஷன் மற்றும் இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் போன்றோர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வெளிப்படையாகத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஹர்ஷா போக்லேவின் எச்சரிக்கை

வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்துவிட்ட போதிலும், ரெட்-பால் (Red-ball) எனப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே கருதுகிறார். வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அவரை அவசரமாக டெஸ்ட் அணியில் சேர்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று அவர் நம்புகிறார்.

இதுகுறித்து கிக்பஸ் (Cricbuzz) ஊடகத்திடம் பேசிய ஹர்ஷா போக்லே, "நான் வைபவ் சூர்யவன்ஷியின் மிகப்பெரிய ரசிகன், அவளது திறமை மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான அவரது மாற்றம் குறித்து எனக்கு சில கவலைகள் உள்ளன. இளையோர் (Under-19) போட்டிகளில் அவர் 12 இன்னிங்ஸ்களில் 18.82 சராசரியுடன் 207 ரன்க மட்டுமே எடுத்துள்ளார். அவர் மிகச் திறமையான வீரர் என்றாலும், ரெட்-பால் கிரிக்கெட்டில் அவரது கற்றல் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வரும் வைபவ், முதல்தர (First-class) கிரிக்கெட்டில் மிகக் குறைவான போட்டிகளிலேயே விளையாடியுள்ளார். எனவே, தனது கரியரின் தொடக்கத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட் சுமையை அவர் மீது சுமத்துவது எந்தளவுக்கு அறிவார்ந்த செயல் என்ற கேள்வியையும் போக்லே எழுப்பியுள்ளார்.