கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணம் என்ன? ஆ.ராசா கேள்வி

Default Image

கோடநாடு விவகாரத்தில் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா கூறுகையில், கோடநாடு விவகாரத்தில் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். கோடநாடு காவலாளி மரண வழக்கில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதர்கான சமிக்கைகள் இருக்கின்றன. கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. கோடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். முதல்வருக்காகத்தான் கொள்ளையில் ஈடுபட்டதாக சயன் பேட்டியளித்தார். கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணம் என்ன? சிசிடிவி ஏன் வேலை செய்யவில்லை? என்று கேள்வி எழுப்ப்பியுள்ளார். கோடநாடு விவகாரத்தில் சயனை அப்ரூவராக மாற்ற வேண்டும். முதல்வர் கொடுத்த மனுவை வைத்தே காவல்துறையினர் விசாரணையை தொடங்க வேண்டும். தெகல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட தகவலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கேட்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்ப்பியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்