வேலூரில் துணிகரம்.! சுவரில் துளையிட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை.!

Default Image

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளை கும்பல் நகைகளை திருடி சென்றுள்ளது.

வேலூரில் நகரின் மையப்பகுதிக்கு அருகாமையில் தோட்டப்பாளையத்தில் அமைந்துள்ளது ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை. இந்த கடை நேற்று இரவு 10 மணி வரை செயல்பட்டு பின்னர் கடை அடைக்கப்பட்டுஉள்ளது. இரவு காவலர்கள் மட்டும் இருந்துள்ள நிலையில்,

நள்ளிரவில், நகைக்கடையின் பின்புறம் சுவரில் துளையிட்டு கீழ் தளத்தில் உள்ள நகைகளை ஒரு கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. காலையில் கடை ஊழியர்கள் கடையை திறந்த பின்னர்தான் இந்த கொள்ளை சம்பவம் தெரியவந்துள்ளது.

நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நகைகள் எவ்வளவு கொள்ளைப்போனது என இன்னும் சரியாக தெரியவில்லை. அதற்கான கணக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்