இன்று மக்கள் நீதி மய்யம் 7-ம் ஆண்டு தொடக்க விழா..!

Makkal Needhi Maiam

மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “வரும் பிப்ரவரி 21 (21-2-2024) நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று  காலை 10 மணியளவில், கமல்ஹாசன் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.

அந்த நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.

இந்த 7-ம் ஆண்டு துவக்க விழாவில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இன்று மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் இதை தொடர்ந்து கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  கமல்ஹாசன் கூட்டணி குறித்து  சில நாட்களில் நல்ல  செய்தி வரும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக  கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால் கூட்டணி குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்