நேற்று மாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 50 ஆயிரத்து 760 மெட்ரிக் டன் நிலக்கரி வந்ததையடுத்து மின் உற்பத்தி சீரானது.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தூத்துக்குடியில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 50 ஆயிரத்து 760 மெட்ரிக் டன் நிலக்கரி வந்தது. இதையடுத்து தற்போது அங்கு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.