இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது – அமைச்சர் மா.சுப்ரமணியன்

Ma.subramaniyan

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் பெய்துள்ள இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது .

வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களும் சென்னையில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். டிச.1முதல் 5 ஆம் தேதி வரை  சென்னையில் அதிகபட்சமான மழைப்பொழிவு 5 செ.மீ என்பார்கள். ஆனால், இப்பொது நுங்கம்பாக்கத்தில் 58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 12 மடங்கு கூடுதலாக மழை பொழிந்துள்ளது.

தற்போது மழைநீர் வடிகால்களில் மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. சென்னையில் பிரதான தெருக்களில் மழைநீர் வடிந்துள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி நீர்திறப்பு பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்படுகிறது. இன்னும் சில மணிநேரங்களில், பாதிப்பு உள்ள பகுதிகள் சீரமைக்கப்படும். போக்குவரத்து 60% சீராக உள்ளது. முதல்வர் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றார். அனைத்து இடங்களிலும் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்