கண்டெய்னர் சீலை கூட அகற்றாமல் நூதன திருட்டு.. 7 பேர் கொண்ட திருட்டு கும்பல் அதிரடி கைது.!

Default Image

தாம்பரம் துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கன்டெய்னரில் உள்ள 98 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய 7 பேர் கொண்ட கும்பல் தாம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு, வெளிநாட்டில் இருந்து உள்நாட்டிற்கு துறைமுகம் வாயிலாக கண்டெய்னர் மூலம் பொருட்கள் அனுப்பப்படும்.

அப்படி, தாம்பரம் துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக கண்டெய்னர் பெட்டியில், மருந்து பொருட்கள் இருந்துள்ளன. இந்த கண்டெய்னர் பெட்டியின் சீலை கூட உடைக்காமல், நூதனமாக அதனுக்குள்ளே இருந்த 98 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இது குறித்து வழக்குபதிவு செய்த தாம்பரம் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில், 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 2.75 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்