எஸ்.பி.பி-க்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என வெளியான தகவல் தவறு.!

Default Image

பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை மற்றும் அவரின்  மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் எஸ்.பி.பி உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், திரையுலகத்தை சார்ந்த பலர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் எஸ்.பி.பி-க்காக பிரார்த்தனை செய்தனர். சில நாட்களுக்கு முன் கொரோனாவிலிருந்து எஸ்பிபி மீண்டுள்ளார் என அவரது மகன் சரண் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று எஸ்.பி.பி-க்கு  நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட  எஸ்.பி சரண் எனது அப்பாவிற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என வெளியான தகவல் தவறு; ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று வீடியா மூலம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்