மக்களே உடனே போங்க…தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் தொடங்கியது!

Default Image

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி,கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை வார இறுதி நாட்களில் தமிழக அரசு நடத்தி வருகிறது. அந்த வகையில்,இதுவரை 23 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 24-வது கொரோனா தடுப்பூசி முகாம் தற்போது துவங்கியுள்ளது.

குறிப்பாக,சென்னையில் 1,600 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.மேலும்,வீடுகளுக்கு அருகிலேயே முகாம்கள் நடத்தப்படுவதால் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக  அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்